சனி, 12 நவம்பர், 2011

Posted on 7:31 AM by piragasart


பேஸ்புக்கில் அதிகம் ஏமாற்றப்படுபவர்கள் ஆண்களே – ஆய்வில் தகவல்


பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் விரைவாக மோசடியில் சிக்குபவர்கள் ஆண்களே என்று அண்மையில் நடத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
பெண்கள் இந்த மாதிரியான விஷயங்களில் சிக்கிக்கொள்வது மிகவும் குறைவாகக் காணப்படுகின்றார்கள்.
இதற்கு மோசடியாளர்கள் அதிகமாக பெண்களை பயன்படுத்தியே தமது வலையை விரிக்கின்றனர்.
இதனால் பெண்களை விட ஆண்களே இந்த மாதிரி சில்மிஷங்களில் சிக்கித்தவிக்கின்றனர்.
லண்டன் மற்றும் அமெரிக்காவில் 1,649 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில் இந்த சுவாரசியமான அறிக்கை வெளிவந்துள்ளது.
ஆண்கள் பெண்களை விட சீக்கிரத்தில் மயங்குவார்கள் கிடைக்கும் எனவும் ஆண்களே இவ்வாறு சிக்கல்களில் மாட்டுவதாக அந்த ஆய்வு கூறுகின்றது.
இவர்களையும் லேசாக சமூக வலைத்தளங்களின் மூலமாக மடக்கி விட முடியும். பேஸ்புக் பயன்படுத்தும் பலருக்கும் இந்த அனுபவம் இருக்கும்.
ஆண்களுக்கு வரும் friend request க்கு ஒருபோதும் மறுப்பு தெரிவிப்பதில்லையாம். ஆனால் பெண்கள் தமக்கு தெரிந்தவர்களை மட்டுமே ADD பண்ணுகிறார்கள். மற்றவர்களை ignore செய்கிறார்கள்.
கண்டபடி எல்லாவற்றையும் ADD பண்ணும் ஆண்களுக்கு தான் ஆப்புகள் அதிகமாக அடிக்கின்றன. இவ்வாறானவர்களுக்கு தங்களது ரகசியங்களை பகிர்வதும் ஆபத்தை அதிகரிக்கின்றன.
இதுபோன்ற சமூகவலைத்தளங்கள் பொழுதுபோக்கை மட்டுமே நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டவை.
இவற்றில் வாழ்க்கையை தொலைத்து பின் தேடுவது முட்டாள்தனமானது. கண்முன்னே பார்ப்பதெல்லாம் கவர்ச்சியாக தோன்றினாலும் உள்ளிருக்கும் ஆபத்து பின்னாளில் தான் தெரியவரும்.

No Response to " "

Leave A Reply

124.Comஎமது மதிப்புக்குரிய நண்பர்களே இந்த இணையத்தில் விளம்பரம் இடம் பெற இன்றே அனுப்புங்கள் k.p.kamal8@gmail.com