செவ்வாய், 24 ஜனவரி, 2012
Posted on 1:16 AM by piragasart
இலங்கையில் யாழ் இந்துக் கல்லூரியில் அப்துல் கலாம் ஆற்றிய உரை!! (ஒலி வடிவில்)
[ 2012-01-24 07:23:35 | வாசித்தோர் : 1005 ]முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் இன்று யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு வருகை தந்தார். அவர் யாழ் இந்து பிரார்த்தனை மண்டபத்தில் சிறிய குறிப்புரை ஆற்றிய பின்னர் குமாரசுவாமி மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
சுவாமி விவேகந்தரின் ஆன்மீக வருகை, பின்னர் மகாத்த்மா காந்தியின் அகிம்சை வருகை இன்று டாக்டர் கலாமின் அறிவியல் வருகை என இந்து கல்லூரி சமூகத்தினர் இதனை சித்தரித்துள்ளனர்.
அவருடன் அமைச்சர் திஸ்ஸ விதாரண, அமைச்சர் அஸ்வர்,திரு அசோக் காந்த இந்திய தூதுவர் , திரு மகாலிங்கம் இந்திய பிரதி தூதுவர் மற்றும் கல்லூரி அதிபர் திரு கணேசராசா அவர்களும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் பங்குபற்றி இருந்தனர்.
செய்தியை நண்பர்களுக்கு அனுப்புவதற்கு!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
No Response to " "
Leave A Reply