புதன், 11 ஏப்ரல், 2012
இலங்கையிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
Posted on 2:47 AM by piragasart
இந்தோனேஷியாவில் பாரிய பூகம்பம்; இலங்கை மற்றும் இந்தியாவில் அதிர்வு உணரப்பட்டது.....................
இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள 8.8 ரிச்கர் அளவு பூமியதிர்ச்சியால் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தலைநகரம் கொழும்பில் இவ்வாறான ஒரு உணர்வு ஏற்பட்டதாகவும், தொடர் மாடிகளில் உள்ளோர் மற்றும் அனைவரும் பீதியில் வெளியே ஓடிச சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .
இதனால் குறிப்பாக இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்ல வேண்டும் என வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
இதே வேளை சென்னையில் இன்று மதியம் 2 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் பொது மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்தோனேசியாவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ( ரிக்டர் அளவுகோலில் 8 .9 ஆக பதிவானது.) சென்னையிலும் உணரப்பட்டது.
சென்னையைப் பொறுத்த வரையில் மந்தைவெளி , மைலாப்பூர், சாந்தோம் ,ஆழ்வார்ப்பேட்டை மற்றும் எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் ஊழியர்கள் வெளியேறினர்.தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள 8.8 ரிச்கர் அளவு பூமியதிர்ச்சியால் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தலைநகரம் கொழும்பில் இவ்வாறான ஒரு உணர்வு ஏற்பட்டதாகவும், தொடர் மாடிகளில் உள்ளோர் மற்றும் அனைவரும் பீதியில் வெளியே ஓடிச சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .
இதனால் குறிப்பாக இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்ல வேண்டும் என வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
இதே வேளை சென்னையில் இன்று மதியம் 2 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் பொது மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்தோனேசியாவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ( ரிக்டர் அளவுகோலில் 8 .9 ஆக பதிவானது.) சென்னையிலும் உணரப்பட்டது.
சென்னையைப் பொறுத்த வரையில் மந்தைவெளி , மைலாப்பூர், சாந்தோம் ,ஆழ்வார்ப்பேட்டை மற்றும் எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் ஊழியர்கள் வெளியேறினர்.தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
